நண்பனுக்காக இறங்கி வந்த ரஜினி..! காதும் காதும் வைத்தது போல் வேலையை முடிக்கும் தயாரிப்பாளர்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் சூட்டிங் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார் ஐஸ்வர்யா ராய் ரம்யா கிருஷ்ணன் ஜெய் தமன்னா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து வருவதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெறும் என உறுதுணையாக இருக்கும் பழகுழுவினர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கப் போவதாக சமூக வலைதள பக்கத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் சிபி சக்கரவர்த்தி இவர் குறுகிய காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து திரைப்படம் இயக்கப் போகிறார் என்ற செய்தி பலரையும் வியக்க வைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான கலைபுலி தானு என்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்து அவருடைய கால் சீட்டைப் பெற்றுள்ளார் இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது ரஜினியிடம் தேதி கிடைத்துவிட்ட காரணத்தினால் அடுத்த கட்ட வேலையை பரபரப்பாக செய்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி அவர்கள் தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய அலுவலகத்தில் தேசங்கு பெரியசாமிக்கு ஒரு ரூம் போட்டு கொடுத்து கதை ரெடி பண்ணி தர சொல்லி இருக்கிறாராம்.

இவ்வாறு வெளிவந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்பட அறிவிப்பு குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment