அடேங்கப்பா.. அடுத்த இரண்டு படங்களுக்கு ரஜினி கேட்கும் சம்பளம் இத்தனை கோடியா.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் அவருக்கு 169 ஆவது திரைப்படம் இதனை பீஸ்ட், கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது.

இதில் ஜெயிலராக ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ரஜினி ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்து வரும்போது அவரது அடுத்த அடுத்த அப்டேட்டுகளும் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

அந்த வகையில் ரஜினி அடுத்ததாக டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் இணையப் போகிறார் என சில தகவல்கள் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழ் சினிமா ரசிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் ரஜினி கிட்டத்தட்ட ஒரு படத்திற்கு 120 கோடி சம்பளம் வாங்குகிறார்.

இந்த நிலையில் ரஜினி குறித்த ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆம் ரஜினி அடுத்தடுத்த இரண்டு படங்களுக்கு லைக்கா நிறுத்துடன் கை கோர்க்க உள்ளார். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கையில் ரஜினி கேட்கும் அதிகப்படியான சம்பளத்தை கொடுக்க தமிழ்நாட்டில் எந்த நிறுவனமும் தயாராக இல்லை.

ஏனென்றால் யாரிடமும் அவ்வளவு பணம் இல்லை அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க ரெடியாக இருக்கும் ஒரே நிறுவனம் லைக்காதான் அவர்களிடம் தான் அதிக பணமும் இருக்கிறது. ஒரு படத்திற்கு 125 கோடி என இரண்டு படத்திற்கு 250 கோடி சம்பளம் என்பது தான் தெரியும்  ஆனால் இது கூட கூடுதலாக ஜிஎஸ்டி கிட்டத்தட்ட 40 கோடி வரும் ஆக மொத்தம் 300 கோடி வரை ரஜினிக்கு லைக்கா கொடுக்க உள்ளது.

Leave a Comment