ஒரு காட்சியில் நடிக்க மட்டுமே ரஜினி, ரம்யா கிருஷ்ணன் பல டேக்குகள் எடுத்துக்கொண்டனர் – பல வருடம் கழித்து சொன்னா படையப்பா படஇயக்குனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் பல கமர்சியல் படங்களை கொடுத்து வெற்றியை கொண்டுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அந்த வகையில் 1999ஆம் ஆண்டு கேஎ ஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் படையப்பா.

இந்த படம் ஆக்ஷன் சென்டிமென்ட் காதல் என அனைத்தும் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் இந்த திரைப்படம் வெகுவாக கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மணிவண்ணன் செந்தில் மற்றும் பலர் டாப் நடிகர் நடிகைகள் நடித்து இருந்தனர்.

இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிறகு பல நடிகர் நடிகைகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. படையப்பா படத்தில் ரஜினி ஒரு மாஸ் ஹீரோவாக நடித்து இருப்பார். ரஜினிக்கு நிகராக வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டியிருப்பார் இதுவே இந்த படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைந்தது.

இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு ரம்யா கிருஷ்ணனின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதேபோல்தான் ரஜினிக்கும் படையப்பா படத்திற்கு பிறகு பட வாய்ப்பை அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் கே எஸ் ரவிகுமார் அண்மையில் பேட்டி ஒன்றில் படையப்பா படம் குறித்து பேசியுள்ளார் அதை அவர் சொன்னது  :  ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணனை வைத்து ஒரே காட்சியை எடுப்பதற்கு மட்டுமே சுமார் பத்து டேக்குகள் மேல் எடுத்துள்ளதாக கூறினார்.  படத்தில் ஒரு காட்சியில் ரம்யாகிருஷ்ணன் முன்பு  ரஜினி துண்டை தூக்கி போட்டு நாற்காலியில் உட்காருவார்.

இந்த காட்சியை ஆரம்பிக்கும் போதெல்லாம் ரஜினியும், ரம்யா கிருஷ்ணனும் சிரித்து விடுவார்களாம் இதனால் பல டேக்குகள் போனது ஒரு வழியாக ரொம்ப சிரமப்பட்டு அந்த காட்சி எடுக்கப்பட்டதாக கூறினார்.

Leave a Comment