சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரபல நடிகரின் மகள்.! யார் தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது உள்ள அனைத்து நடிகர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது ரஜினிகாந்த் வயது முதிர்ச்சியின் காரணமாக இந்த வருடத்திற்குள் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.ஏனேன்றால் தற்பொழுது இவர் நடிக்கும் படங்களில் ஒரு படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ,சதீஷ் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இத்திரைப்படத்தின் முழு படிப்பும் முடிந்துவிட்டது டப்பிங் வேலைகள் மட்டும் மீதம் உள்ளது.

அந்தவகையில் இத்திரைப்படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என்று கூறியுள்ளார்கள்.  தற்பொழுது ரஜினிகாந்த் சென்னை வந்துள்ளார். தனது உடல் நலத்தை கவனிக்க வேண்டும் என்பதற்காக இன்னும் சில நாட்களில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் ஐதராபாத்தில் ஷூட்டிங் நடைபெற்று இருக்கும் பொழுது தெலுங்கு முன்னணி நடிகர் மோகன் பாபுவின் மகள் லக்ஷ்மி மஞ்சு ரஜினிகாந்தை நேரில் பார்த்து ரஜினியுடன் இணைந்து செல்பீ ஒன்றை எடுத்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment