நல்ல கதையை கூறிவிட்டு மொக்க கதாபாத்திரத்தை கொடுத்த ராஜமௌலி – கோபத்தின் உச்சிக்கே சென்ற கமல்.! என்னடா இது.? ஆண்டவருக்கு வந்த சோதனை.

அண்மை காலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் சிறந்த படங்களை கொடுத்து அசத்தி வருபவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் இதுவரை பிரமாண்ட பட்ஜெட்டில் பாகுபலி, பாகுபலி 2 அதைத் தொடர்ந்து அண்மையில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் ஆகியவர்களை  வைத்து RRR என்னும் படத்தை உருவாக்கியிருந்தார் இந்தப் படமும் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி அடுத்த படத்தை இயக்க உள்ளார் அந்த படத்தில் யார் ஹீரோ மற்றவர்கள் யார் நடிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள சினிமா ரசிகர்கள் பெரிதும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் அதேசமயம் ராஜமௌலி ஒரு படத்தை எடுக்க சுமார் இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்வதும் உண்மைதான்.

இருந்தாலும் நடிகர் நடிகைகள் ராஜமவுலி படத்தில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்த படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க நேரில் சென்று பேசி உள்ளார் ராஜமௌலி படத்தின் கதையை சுருக்கமாக சொன்னாலும் கமலுக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டதாம்.

எப்படிப்பட்ட  கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என அவர் கேட்க RRR படத்தில் அஜய் தேவகன் எப்படி ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து மிரட்டி இருப்பாரோ அதுபோன்ற ஒரு கதாபாத்திரம் தான் இந்தப் படத்தில் உங்களுக்கு என கூறி உள்ளார் அப்போது படத்தின் ஹீரோ யார் என பெயர் கேட்க மகேஷ்பாபு என கூறி உள்ளார்.

பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கமல் உடனே கடுப்பாகி நான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என கூறி அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். டாப் நடிகரான கமலை ராஜமௌலி சந்திக்கிறார் என்றால் ஒரு ஹீரோவாக உள்ள கதையை சொல்ல வேண்டும் ஆனால் அவரோ ஒரு முக்கியமான சின்ன ரோலில் நடிக்க வைப்பது.

அந்த அளவிற்கு சிறப்பாக இருக்காது கமலும் அண்மை காலமாக தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார் இப்படி இருக்கும்போது குணச்சித்திர பாத்திரத்தில் நடித்தால் அவரது மார்க்கெட் இறங்கிவிடும் அதை நன்கு உணர்ந்து கொண்ட கமல் சரியான முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது ராஜமௌலி சொல்லப்போனால் கூப்பிட்டு அசிங்கப்படுத்தி விட்டார்.

Leave a Comment