ஜவான் படத்தை பார்த்துவிட்டு ராஜமௌலி போட்ட ட்வீட்.! அட்லீயை பற்றி என்ன சொல்லியுள்ளார் பாருங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் அட்லீ. இவர் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து மொத்த வித்தைகளையும் கற்றுக்கொண்டு பின் இயக்குனராக ராஜா ராணி என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார் இந்த படத்தை தொடர்ந்து விஜயுடன் கைகோர்த்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார்.

அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானை சந்தித்து ஒரு கதையை கூற அது ரொம்ப பிடித்து போகவே ஜவான் என்ற பெயரில் அதிரடியாக உருவானது படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, விஜய் சேதுபதி, சஞ்சய்தத் என மிகப் பெரிய திரை பட்டாளமே நடித்தது. 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் எங்கும் கோலாகலமாக ரிலீஸ் ஆனது.

படம் ஆக்சன், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்து இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது அதனால் பல்வேறு திரையரங்குகளில் இன்றும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது அதன் காரணமாக வசூலிலும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.

மூன்று நாள் முடிவில் மட்டுமே 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது நிச்சயம் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் ஜவான் படத்தை பார்த்துவிட்டு  பதிவுகளைப் போட்டு வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் ராஜமௌலி ஜவான் படத்தை பார்த்துவிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு வைரல் ஆக்கியுள்ளார்.

அவர் சொன்னது என்னவென்றால்.. இதனால் தான் ஷாருக்கான் பாக்ஸ் ஆபிஸின் பாட்ஷா.. பூமி அதிரும் ஓப்பனிங் இது.! வடக்கிலும் வெற்றியை தொடரும் அட்லீக்கு வாழ்த்துக்கள் மிகப்பெரிய வெற்றிக்கு ஜவான் டீமுக்கும் வாழ்த்துக்கள் என ராஜமௌலி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version