“RRR” படத்தைத் தொடர்ந்து 500 கோடியை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் இறங்கும் ராஜமௌலி – கூட போறது யார் தெரியுமா..

எஸ் எஸ் ராஜமௌலி பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களை தொடர்ந்து RRR என்னும் திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் எடுத்து உள்ளார். படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக கடந்த மாதம் 24ம் தேதி உலக அளவில் வெளியானது பாகுபலி படத்தை போலவே இந்தப் படத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்திருந்தனர்.

அதற்கு ஏற்றார்போல படமும் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி அடைய வைத்தது. அந்த அளவிற்கு படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக சிறப்பாகவும், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. மேலும் எச்டி தரத்திலும் எடுக்கப்பட்டிருந்தால் ரசிகர்கள் கண்ணிமைக்காமல் இந்த படத்தை பார்த்து கொண்டாடினர்.

RRR படம் முதல்நாளில் மட்டுமே 200 கோடி வசூல் செய்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது இதுவரை 700 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. RRR படத்தை தொடர்ந்து ராஜமௌலி தெலுங்கு டாப் ஹீரோவான மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்திருக்கிறார்.

இந்த படம் திரில்லர் மற்றும் அட்வெஞ்சர் நிறைந்த திரைப்படமாக உருவாகும் என கூறப்பட்டது இந்த படத்திற்கான கதையை எழுதி வருகிறார். மகேஷ் பாபு –  ராஜமௌலி இணைக்கும் புதிய திரைப்படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் 500 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தின் ஷூட்டிங் இந்த வருடம் இறுதியில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது அதேசமயம் மகேஷ்பாபுவும் இப்பொழுது இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அதனை வெற்றிகரமாக முடித்துவிட்டு இருவரும் ஆபிரிக்கா கண்டத்திற்கு பிறப்பார்கள் என கூறப்படுகிறது.

Leave a Comment