டிஆர்பியை எகிற வைக்க புதிய நடிகையை களமிறக்கும் ராஜா ராணி சீரியல் குழு.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியகளுமே  ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் ராஜா ராணி. இந்த சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஆலியா மானசா இவருக்கு ஜோடியாக சஞ்சிவ் நடித்திருந்தார்.

இந்த சீரியலில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதால் இரண்டாவது சீசனை இயக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

ஆனால் இரண்டாவது சீசன் ஆரம்பிக்கும் அதற்கு முன்பே சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வந்தார். ஆலியா மானசாவிற்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்பொழுது ராஜா ராணி சீசன் 2வில் ஆலியா மானசா கதாநாயகியாகவும் இவருக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழில் நடித்து வந்த சித்து நடித்து வருகிறார்.

இரண்டாவது சீசன் தற்போது தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதிதாக இத்திரைப்படத்தில் ஸ்ரீலேகா ராஜேந்திரன் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஸ்ரீலேகா ராஜேந்திரன் இதற்கு முன்பு காற்றின் மொழி, வாணி ராணி, அன்பே வா,கோலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment