ராஜா ராணி சீரியலில் கொடூர வில்லியாக நடித்த ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகளா.! முதன் முறையாக அவர் வெளியிட்ட புகைப்படம்.!

விஜய் தொலைக்காட்சியில் படத்தின் தலைப்புகளில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இப்படி படத்தின் டைட்டிலை வைத்து ஒளிபரப்பப்பட்டு வரும்  சீரியல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் ராஜா ராணி. பாரதி கண்ணம்மா. கடைக்குட்டி சிங்கம் என பல சீரியல்களும் படத்தின் பெயரை வைத்துதான் ஒளிபரப்புகிறார்கள்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்களில் வில்லியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி அசோக். இவர் ராஜா ராணி பூவேஉனக்காக போன்ற சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர். ஸ்ரீதேவி அசோக் முதன்முதலில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர்.

அதன் பிறகு தமிழில் கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி, என பல சீரியல்களில் வில்லியாக நடித்து சின்னத்திரையில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்த நிலையில் தற்பொழுது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பூவேஉனக்காக மற்றும் விஜய் தொலைக்காட்சியில் காற்றுக்கென்ன வேலி போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

raja rani
raja rani

சீரியல்களில் கொடூர வில்லியாக நடித்து வரும் இவர் நிஜத்தில் செம ஜாலியான டைப். செல்லப்பிராணிகளின் காதலியாக இருக்கும் ஸ்ரீதேவிக்கும் அவரின் காதலர் அசோக் சீதா என்பவருடன் 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி அவர்களுக்கு வளைகாப்பு நடத்தி னார்கள் அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரைப் போலவே அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது இதுவரை தனது மகளின் முகத்தை மீடியா பக்கம் காட்டாமல் இருந்த ஸ்ரீதேவி முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மேலும் தனது மகளுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை எனவும் விரைவில் பெயர் சூட்டு விழா நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.

raja rani
raja rani

Leave a Comment