தோனிக்கு பிறகு CSK அணியின் புதிய கேப்டன் ரெய்னா இல்லிங்கோ.! இந்த வீரர் தான்.?

இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்கள் நடைபெற்றுவருகிறது. இத்தொடர் 2008 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை இந்த ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன இப்பொழுது வரையிலும் 12 சீசன்கள் முடிவடைந்த இது உள்ளன. பதின்மூன்றாவது சீசனை தற்பொழுது செப்டம்பர் ஆரம்பிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை  கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் தோனி இவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை மூன்று தடவை பெற்றுள்ளது மேலும் அந்த அணியை பலமுறை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஒரே அணி வீரராக தற்பொழுது வரையிலும் திறந்து வைக்கிறார்.

தல தோனி இந்த சீசன் அல்லது அடுத்த ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர் பார்க்கப்படுகிறது ஆனால் தோனிக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்டன் யாராக இருப்பார் என தற்போது ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரெய்னா செயல்படுவார் என பலர் கூற பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

raina
raina

ஆனால் அவர் கேப்டனாக மேட்சை கையாளுவது சற்று கடினமாக இருந்தது அதனை பல போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்த பொழுது நாம் பார்த்துள்ளோம். அவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவது சற்று சந்தேகமாக இருக்கிறது.

ravindra jadeja
ravindra jadeja

அவருக்கு பதிலாக வேறு ஒருவரை கேப்டனாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுறுசுறுப்பாக இருக்கும் இளம் வீரரான ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது ஏனென்றால் இவர் தோனியின் கீழ் பல ஆண்டுகள் விளையாடி அதனால் அவருக்கு அனுபவம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Leave a Comment