ரெய்னாவை சிஎஸ்கே அணி அல்ல.. எந்த அணியும் எடுக்காமல் போகக் காரணமே இதுதான் – நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டபுல் பேச்சு.

ஐபிஎல் 15வது சீசன் வருகின்ற மார்ச் மாதத்தில் தொடங்க இருக்கிறது இதற்கு முன்பாக இரண்டு அணிகள் அதாவது அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டது இதற்காக மிகப்பெரிய மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.

இதில் மொத்தம் 204 வீரர்கள் வாங்கப்பட்டனர் 10 அணிகள் சேர்ந்து சுமார் 151 கோடி செலவு செய்து உள்ளது இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் இஷன் கிஷன் 15.25 கோடிக்கு விலை போனார். அதே சமயம் ஒரு சில முக்கிய வீரர்கள் ஏலத்தில் போகாமல் போனது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது அதிலும் குறிப்பாக சென்னையை சேர்ந்த சுரேஷ் ரெய்னா எந்த ஒரு அணிக்கும் எடுக்காமல் போனது அதிர்ச்சியை கொடுத்தது அதிலும் குறிப்பாக சென்னை அணியை அவரை கைவிட்டது.

ரசிகர்களின் கருத்து சென்னை அணி அவரை எழுதியிருக்கலாம் சென்னை அணிக்கு பல கோப்புகளை வெல்லும் பொழுது CSK அணிக்கு உறுதுணையாக இருந்தவர் என்பதை மறந்து விட்டது அவரை அணியில் இருந்து பெஞ்சில் ச  உட்கார வைத்து அழகு பார்த்து இருக்கலாம் ரசிகரின் கருத்தாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நியூசிலாந்தின் முன்னாள் சைமன் டபுள் சுரேஷ் ரெய்னாவை எடுக்காதது குறித்து பேசியுள்ளார்.

CSK அணிக்காக பல வருடங்களாக விளையாடி வரும் சுரேஷ் ரெய்னாவை எடுக்காதது குறித்து பேசினார் அதில் அவர் சொல்லவருவது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தடவை ஐபிஎல் மேட்ச் நடத்தப்பட்டது ஆனால் அப்போது சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ள முடியாது என கூறினார் ஆனால் தோனி அவர் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார் ஆனால் அது CSK அணிக்கு ஏமாற்றமாக மாறியது.

கடந்த ஐபிஎல் சீசனிலும் சுரேஷ் ரெய்னாவின் ஆட்டமும் சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக அமையவில்லை சிஎஸ்கே எதிர்பார்த்ததுபோல் சுரேஷ் ரெய்னா செயல்படவில்லை உண்மையில் சொல்லப்போனால் பவுன்சர் பந்துகளுக்கு அவர் ரொம்ப பயப்படுகிறார் என ஓபன்னாக சொல்லி முடித்தார் நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டபுள். இதை மனதில் வைத்தே CSK அணி எடுக்க சுரேஷ் ரெய்னாவை எடுக்கவில்லை மற்ற அணிகளும் முன்வரவில்லை என கூறினார்

Leave a Comment