ராகவலாரன்ஸின் அடுத்த அதிரடி அறிவிப்பு.! உதவி கேட்டவர்களின் நிலைமை கேள்விகுறியா.?

அஜித் நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ராகவா லாரன்ஸ். இவர் நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதலில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானார். இதற்குப் பிறகு தான் கதாநாயகனாக நடித்து வந்தார். இதைத் தொடர்ந்து அவர் பார்த்தேன் ரசித்தேன், அற்புதம், ஸ்டைல், மாஸ், முனி இன்னும் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இவருக்கு பொதுவாக அனைவருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உள்ளதால் அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தற்போது கோரானா வைரஸின் காரணமாக உலகமே அளன்டு போயுள்ளது. இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள், திரை உலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்திய மாநில அரசுக்கு உதவி புரிந்து வருகின்றன. இந்த வகையில் தற்போது   ராகவா லாரன்ஸ் இடம் உதவி கேட்டுள்ளனர். அப்போது ராகவா லாரன்ஸ் அவர்கள் தற்போது என்னிடம் பணம் இல்லை இருந்த பணத்தை ஏற்கனவே கேட்டவர்களிடம் கொடுத்துவிட்டேன் எனவும், சந்திரமுகி 2 படக்குழுவினர் எனக்கு பணம் தர வேண்டும் அப்பணம் வந்த பிறகு தருகிறேன் என குறியுள்ளார். அதுமட்டுமல்லாமல்  லக்ஷ்மி பாம் படக்குழுவினர் எனக்கு  தரவேண்டிய 2 லட்சம்  பணத்தை  நேரடியாக பிரதிநிதிக்கு அனுப்ப மாறு கூறிவிட்டேன். அவர்களும் நான் அனுப்பி விடுகிறேன் என கூறியுள்ளார்கள்.

அது மட்டுமல்லாமல் சில இடங்களில் இருந்து இன்னும் பணம் வரவேண்டியதுள்ளது.  வந்த பிறகு கட்டாயமாக உங்களுக்கு தருகிறேன். உங்கள் கஷ்டம் எனக்கு புரிகிறது எனக் கூறிய ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment