ரூ.10 லட்சம் பணத்தை பாலாவிற்கு கொடுத்த ராகவா லாரன்ஸ்.. எந்த காரணத்தால் தெரியுமா.?

தமிழ் திரை உலகில் நடன இயக்குனர்,நடிகர்,இயக்குனர் போன்ற பல திறமைகளை கொண்டு வலம் வரும் பிரபலம் தான் ராகவா லாரன்ஸ் இவர் நிறைய திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி தற்பொழுது கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் ருத்ரன் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் சரத்குமார்,பிரியா பவானி சங்கர்,பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்று உள்ளது மேலும் இதில் 3000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வருகின்ற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பாளராக பங்கேற்றவர்தான் விஜய் டிவி பாலா இந்த நிகழ்ச்சியில் பல ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்து வரும் பாலாவிற்கு ராகவா லாரன்ஸ் மேடையில் தனது தாயார் கையில் ரூ10 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளன.ஆம் மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு நல்ல மனசு அவர் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று ஊனமுற்றவர்களுக்காக நடத்தி வருகிறார்.

bala
bala

என கூறுவது மட்டுமல்லாமல் பலரும் ருத்ரன் திரைப்படம் கண்டிப்பாக பல கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு இருக்கும் ஏனென்றால் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு சில காலங்கள் கழித்து வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment