சந்திரமுகி 3 படத்தில் இருக்கும் சஸ்பென்சை உடைத்த ராகவா லாரன்ஸ்.! இணையத்தில் வைரலாகும் தகவல்…

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடன ஆசிரியராகவும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது ருத்ரன் திரைப்படத்தில் நடித்து முடித்தவர் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் லட்சுமி மேனன் மற்றும் சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவை கதாபத்திரத்தில் நடிகர் வடிவேலு அவர்கள் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் ருத்ரன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனக்கு எப்படி சந்திரமுகி 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து பேசி இருந்தார். அப்போது இயக்குனர் வாசு படத்தை இயக்குகிறார் என்று தெரிந்ததும் படத்தின் நடிகர்கள் மற்றும் நடிகைகளை தேர்வு செய்து விட்டார்களா என்று நான் விசாரித்தேன் என்று கூறியுள்ளார்.

அதற்காக ஆடிஷன் செய்ய விரும்புவதாகவும் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார். மேலும் படத்தின் முதல் பாகத்திற்கும் அதனுடைய தொடர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். சந்திரமுகி படத்தின் இறுதி காட்சி குறித்து ராகவா லாரன்ஸ் இடம் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.

அப்போது ராகவா லாரன்ஸ் தனக்கும் பாம்பு தொடர்பான கேள்விகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதைத்தான் இயக்குனர் இடம் கேட்கும் போது இயக்குனர் வாசு அவர்கள் இதை மூன்றாம் பாகத்தில் தான் வெளிப்படுத்துவேன் என்று கூறியதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

Exit mobile version