அவ்ளோ கெஞ்சியும் கேட்காத ராதிகா..! நேரம் பார்த்து கைவரிசையை காட்டிய ஆண்டவர்..!

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என போற்றப்படும் நடிகர் தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நடிகர் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் பல்வேறு நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ள நிலையில் ராதிகாவுடன் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார் அந்த வகையில் அவர் நடித்த திரைப்படம் சிற்பிக்குள் முத்து மற்றும் பேர் சொல்லும் பிள்ளை ஆகும்.

பொதுவாக நடிகை ராதிகா படப்பிடிப்பு தளத்தில் மிகவும் சுட்டித்தனமாக நடந்து கொள்வது வழக்கமான நிலையில் அவருக்கு சமமாகவே கமலஹாசனும் ஏதாவது சுட்டித்தனத்தை காட்டி வந்தார் அந்த வகையில் நடிகை ராதிகா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது கமலஹாசன் தன்னிடம் படப்பிடிப்பு தளத்தில் கெஞ்சிய ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

பொதுவாக நடிகை ராதிகாவிற்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ள காரணத்தினால் அடிக்கடி படபிடிப்பு தளத்தில் மயக்கம்  அடைந்து விடுவது வழக்கம் இல்லையென்றால் சற்று அசதியாக இருக்கும் என்று கூறி படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வாரம் இதனை நன்றாக தெரிந்து கொண்ட கமலஹாசன் அவர்கள் இன்று நான் படப்பிடிப்பை விட்டு வெளியே போக வேண்டும் ஆகையால் நீ மயக்கம் வந்தது போல் நடி என்று கெஞ்சினாராம்.

இதைக் கேட்ட ராதிகா அவர்கள் என்னால் அவையெல்லாம் செய்ய முடியாது என்று கமலஹாசன் சொன்னதை நிராகரித்து விட்டாராம். பிறகு சரி போய் தொல என ராதிகாவை திட்டிவிட்டு கமலஹாசன் ஷூட்டிங்  சென்று விட்டாராம் பின்னர் ராதிகா மற்றும் கமலஹாசன் இருவரும் நடிக்கும் பொழுது திடீரென ராதிகா கீழே விழுந்தாராம்.

இதை பார்த்த கமலஹாசன் அவர்கள் சனியன் நான் சொல்லும் பொழுது மயக்கம் போட்டு விழாது நேரம் கெட்ட நேரத்துல இந்த மாதிரியான வேலை எல்லாம் செய்யும் என பயங்கரமாக கலாய்த்தாராம் இவ்வாறு கமலஹாசன் திட்டியதை மிகவும் கலகலப்பாக நடிகை ராதிகா அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment