சிம்புவை வைத்து படம் பண்ண ஆசைப்பட்ட ராதிகா.? கடைசியில் சிம்புவின் அம்மா சொன்ன பதிலை கேட்டு தலையில் துண்டு போட வேண்டிய நிலைமை ஆகிவிட்டதாம்.

சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் எப்போதும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் கொண்டாட வைக்கின்றனர் ஆனால் ஒரு சில நடிகர்கள் அதை செய்ய மறுத்து விடுகின்றனர் அந்த வகையில் நடிகர் சிம்பு தனது சொந்த பிரச்சினைகள் காரணமாக ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்கவில்லை.

மேலும் கமிட்டான படங்களில் பாதியிலேயே  போட்டு விட்டு விட்டார் இதனால் அவர் மீது தமிழ் சினிமா சிம்பு அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை வைத்தது இதை மாற்றும் வகையில் நடிகர் சிம்பு தன்னை முற்றிலுமாக மாற்றி புதிய அவதாரம் எடுத்துக் கொண்டு தொடர்ந்து தற்போது புதிய படங்களில் நடித்து தனது ரசிகர்களை மகிழ்விக்க முதலில் ரெடியாக இருக்கிறார்.

பின் ஒவ்வொரு பிரச்சனையும் சரி செய்ய ரெடியாக இருக்கிறார் சிம்பு.  ஏற்கனவே ஈஸ்வரன் திரைப்படம் வெளிவந்த சுமாரான வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் இன்று “மாநாடு” திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் சிம்பு மற்றும் எஸ். ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் மிரட்டும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் வெளிவருகின்றன.

நிச்சயம் இந்த திரைப்படம் சிம்புவிற்கு ஒரு மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாக மாறும் என தெரியவருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல, கொரோனா குமார், வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகை ராதிகா சரத்குமார் நடிகர் சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க ஆசை பட்டுள்ளார்.

இதனையடுத்து சிம்புவுடன் நேராக போய் கேட்டுள்ளனர்.  அதற்கு சிம்பு ஓகே என கூறிவிட்டு சம்பள விஷயம் மட்டும் தனது அம்மாவிடம் பேசிக் கொள்ளுங்கள் என கை நீட்டி விட்டார். ராதிகாவும் அவரது அம்மாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார் அப்போது அவர் எல்லாம் ஓகே தான் ஆனால் நடிகர் சிம்பு இப்போ வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக தரவேண்டும் பேரம் எதுவும் கிடையாது என உறுதியாக கூற.. நடிகை ராதிகா ஷாக் ஆகி விட்டாராம். மேலும் இனி சிம்புவை வைத்து படம் தயாரிக்க வேண்டாம் என கூறி அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

Leave a Comment