சன் டிவியில் இருந்து விலகி மற்றொரு சேனலுக்கு மாறிய ராதிகா.!

தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ராதிகா, இவருக்கு தற்போது எந்தவித படவாய்ப்புகளும் கிடைக்காததால் சீரியல்களில் நடித்து வருகிறார். என்னதான் சீரியலில் நடித்து வந்தாலும் முன்பு எப்படி அவருடைய திறமை இருந்ததோ அப்படியே அந்த திறமையை சீரியலிலும் வெளிப்படுத்துகிறார் ராதிகா.

முன்பெல்லாம் மக்களால் பொதுவாக அறியப்பட்ட ஒரு தொலைக்காட்சி சன் டிவி என்றால் அது மிகையாகாது, ஏனென்றால் அந்த அளவிற்கு வயதானவர்கள் அனைவரும் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களுல் மூழ்கியிருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் சன் டிவியை கொஞ்சம் கொஞ்சமாக பின்தள்ளி ஸ்டார் விஜய் முன்னுக்கு வந்தது அதை தொடர்ந்து ஜீ தமிழும் தனக்கென தனிபெறும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

இப்படி இருக்க இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் நடிக்கும் நபர்கள் அனைவரும் பிரபலமாகின்றனர் அல்லது பிரபலமாணவர்களாக இருக்கின்றனர். அந்த வரிசையில் சரத்குமாரின் மனைவி ராதிகா சன் டிவி ஒளிபரப்பப்பட்டு வந்த “சித்தி 2” என்னும் சீரியலில் மிக அருமையாக நடித்து வந்தார் தற்போது அந்த சீரியலை விட்டு வெளியே சென்றுள்ளார்.

இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியது என்னவென்றால் “நான் இனி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன்” என்று கூறியுள்ளார், மேலும் ராதிகாவுக்கு சொந்தமான ராடான் நிறுவனம் கலைஞர் டிவிக்காக ஒரு புதிய சீரியலை எடுத்து வருகிறதாம், இந்த நாடகத்தில் ராதிகா நடிக்கப் போகிறாரா அல்லது தயாரிப்பாளராக உள்ளாரா என்பது பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை ஆனால் இந்த நாடகத்தின் பெயர் “பொன்னி’ என்று மட்டும் தெரியும்.

Leave a Comment