கோபி தலையில் ஒரேடியாக இடியை இறக்கும் ராதிகா.! பயமா இருக்கா இனிமேதான் பயங்கரமா இருக்கும் பங்கம் செய்யும் ராமமூர்த்தி..

பாக்கியா ராமமூர்த்தியிடம் இனியாவை டியூஷனுக்கு போக சொல்லுங்கள் அவருக்கு பீஸ் கட்டி விட்டேன் இதை அவரிடம் கூற வேண்டாம் கூறினால் டியூஷன் அனுப்ப மாட்டார் இனியாவை என பாக்யா ராமமூர்த்தி இடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். பீஸ் 12 ஆயிரத்தை பார்த்ததும் ராமமூர்த்தி அதிர்ச்சி அடைகிறார் இனிய நல்லா படித்தால் போதும் என பாக்யா ராமமூர்த்தி இடம் கூறுகிறார் பின்பு ராமமூர்த்தி நான் கிளம்புகிறேன் நேரமாகிவிட்டது என ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

ராதிகா வீட்டிற்கு வந்த ராமமூர்த்தி. அங்கு கோபி இனியாவிற்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அது மட்டுமில்லாமல் கோபி நீ நல்ல மார்க் வாங்கணும் அதற்காக தான் டாடி உன்னை திட்டினேன் அதனால் இங்கிருந்து அந்த வீட்டுக்கு போறேன் என்று கூறக்கூடாது என அட்வைஸ் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு வந்த ராமமூர்த்தி இனியாவிடம் நீ டியூஷன் போறியா என கேட்கிறார்.

உடனே கோபி டியூஸ்னா எதற்கு அதெல்லாம் வேண்டாம் என கூற உடனே ராமமூர்த்தி அவனுடைய அப்பா என்னடா வேண்டாம் ஒரு அப்பனா இனியா மார்க் குறைஞ்சிடுச்சு நீயே ஒரு நல்ல டியூஷனா பார்த்து சேர்த்து விடணும் ஆனா நீ செய்யல என கூற ராதிகாவும் இனியா டியூஷன் போனால் நல்லது தான் எனக் கூறுகிறார். உடனே ராமமூர்த்தி பீஸ் கட்டண விஷயத்தை சொல்லுகிறார். இனியாவும் அந்த டியூஷன்ல தான் என்னுடைய பிரண்டும் படிக்கிறா என இனியா கூறிக் கொண்டிருக்கிறார்.

உடனே கோபி டியூஷன் பீஸ் எவ்வளவு கட்டினீங்க என கேட்டு உள்ளே போய் பணத்தை எடுத்துக் கொண்டு ராமமூர்த்தி இடம் கொடுக்கிறார்  உடனே ராமமூர்த்தி இதனைக் கொண்டு போய் பாக்யா கிட்ட கொடு இனிய மார்க் குறைஞ்சிட்டான்னு சொன்ன உடனே நல்ல டியூஷன் எது அவனுடைய பிரெண்ட்ஸ் எங்க படிக்கிறாங்கன்னு விசாரிச்சு பீஸ் கட்டிட்டா அவ தான் உண்மையான அம்மா எனக் கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சி அடையும் கோபி அவ கிட்ட போய் பணத்தை கொடுங்க என்கிறார் ஆனால் ராமமூர்த்தி தேவை என்றால் நீங்க போய் கொடுங்க என கூறி விடுகிறார் இந்த பக்கம் பாக்கிய குடும்பம் வரவு செலவு கணக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஜெனி இடம் செலவு அதிகம் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இதனைக் கேட்ட ஈஸ்வரி இதில் பாதி செலவை நீயா இழுத்து போட்டுக்கிட்ட எப்படி சமாளிக்க போற கோபி இருக்கிற வரைக்கும் வீடு கஷ்டமே தெரியல இனிமே தான் அவனோட அருமை உனக்கு புரியும் என சொல்லிவிட்டு செல்கிறார்.

அதன் பிறகு எழில் பாட்டியிடம் சென்று பேசினார் வர்ஷினி ஓட அப்பா கிட்ட போய் மன்னிப்பு கேட்டு அவர் என்ன சொல்றாரோ அதற்கு சரின்னு சொல்லி படம் பண்ற வேலைய பாரு என ஈஸ்வரி கூற உடனே எழில் அது மட்டும் நடக்காது கண்டிப்பா நான் படம் பண்ணுவேன் என சொல்லிவிட்டு வெளியே வருகிறார். அதேபோல் இந்த பக்கம் ராதிகா வீட்டு கணக்கு செலவுகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கோபி எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லு நான் பார்த்துக்கொள்கிறேன் நீ எவ்வளவு வேணும்னு மட்டும் சொல்லு என கேட்க வீட்டு செலவுக்கு மட்டும் 50 ஆயிரம் ரூபாய் வேண்டும் என சொல்கிறாள்.

அதனைக் கேட்ட கோபி ஆடிப் போகிறார் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் ராமமூர்த்தி அந்த வீட்டில் இருந்தப்ப பத்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு என்னென்ன பேசுவ இப்ப 50,000  ஆயிரம் ரூபாய் என சொல்கிறார்  என்ன பயமா இருக்கா இதுக்கு மேல தான் பயங்கரமா இருக்கும் என பங்கம் செய்கிறார் ராமமூர்த்தி இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment