கோடி ரூபாய் கொடுத்தாலும் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.! அந்த மாதிரி நடிகை நான் கிடையாது எனக் கூறிய ராதிகா ஆப்தே..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி  நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராதிகா ஆப்தே பாலிவுட் சினிமாவின் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார். மேலும் பாலிவட்டில் தொடர்ந்து மிகவும் போல்டாக இருக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றார்.

அந்த வகையில் தமிழில் தோணி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதிலும் முக்கியமாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து கபாலி படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் தன் பக்கம் இருந்தார் நடிகை ராதிகா ஆப்தே.

மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார் அந்த வகையில் சமீப காலங்களாக இவர் படங்களின் கதைக்காக ஆடையின்றியும் மிகவும் ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சைக்குரிய திரைப்படங்களிலும் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

மேலும் இதனால் பல சர்ச்சைகளை சந்தித்தார் இந்நிலையில் வருண் தவாணின் பத்லாபூர் படத்தில் ஆடையை கழட்டி தூக்கி போடும் படியான காட்சிகளில் நடித்ததால் பலரும் என்னிடம் செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க கேட்கிறார்கள் ஆனால் நான் அப்படி போட்ட நடிகை கிடையாது. அதுபோன்ற படங்களில் நடிக்கவும் மாட்டேன் பெண்களை காயப்படுத்தும் பெண்களை, செக்ஸ் பொருளாக பார்க்கும் படங்களில் ஒரு பொழுதும் ஏற்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஸ்கிரிப்டை பொறுத்துதான் கதையைத் தேர்ந்தெடுக்கிறான் என்றும் தெரிவித்துள்ளார் ராதிகா ஆப்தே. இவ்வாறு சமீப பேட்டி ஒன்றில் இவர் கூறிய இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் ராதிகா ஆப்தே பெரும்பாலும் சமூகத்திற்கு நல்ல கருத்தை கூறும் திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment