சின்னத்திரையில் புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்த ரச்சிதா.! எந்த தொலைகாட்சியில் தெரியுமா.? வைரலாகும் புரோமோ..

பிரபல விஜய் டிவியில் 2011ஆம் ஆண்டு வெளியான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி.  இந்த சீரியலின் மூலம் அறிமுகமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2 சீரியலில் நடித்திருந்தார் இந்த சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இவர் நடித்த முதல் சீரியலான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் இவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களின் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒருபுறமிருக்க சின்னத்திரையில் நடித்து வந்தாலும் இதற்கு முன்பு உப்புகருவாடு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் திரைப்படம் பெரிதாக பிரபலமாகத காரணத்தினால் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கவில்லை அதன் பிறகுதான் சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதன்பிறகு இளவரசி, கீமாஞ்சலி நடித்திருந்தார்.  அதன்பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் என்ற சீரியலில் இவருடைய கணவருடன் இணைந்து நடித்திருந்தார் இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கேரக்டரில் நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகிய ரட்சிதா மகாலட்சுமி தற்பொழுது கலர்ஸ் தமிழில் உருவாகிவரும் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலின் புரோமோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீரியல் மார்ச் 7ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment