தமிழ் சினிமா உலகில் சைலண்டாக இருந்துகொண்டு ஆக்சன் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் 200 கோடிக்கு மேல் அள்ளி ஒரு புதிய சாதனையைப் படைத்து இருந்தது.
சினிமாவுலகில் இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் தன் வேலை உண்டு நான் உண்டு மற்றும் தன்னை நம்பி ஒருவருக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் இதனால் ரசிகர்கள் சினிமாவையும் தாண்டி அஜித்தை ஒரு நல்ல மனிதராக பார்க்கின்றனர்.
அதே சமயம் ரசிகர்கள் அஜித் என்ன செய்கிறார் எங்கு போகிறார் என எல்லாத்தையும் தெரிந்துகொண்டு அவரை சுற்றி வளைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் வலைப்பேச்சு அந்தனன் நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது.
அஜித்தை அவரது ரசிகர்கள் நடிக்க விட மாட்டார்கள் என கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக அவர் சொன்னது. அஜித்தின் பெரும்பாலான திரைப்படங்கள் வெளி மாநிலங்களில் தான் படமாக்கப்படுகின்றன காரணம் அஜித் ரசிகர்கள் தான் என கூறினார். சென்னையில் அஜித் படப்பிடிப்பு நடந்தால் அஜித்தை பார்க்க ஏராளமான மக்கள் மற்றும் ரசிகர்கள் கூடுவார்கள்.
படப்பிடிப்பு முடிந்து திரும்பும் போதும் அவரை தொடர்ந்து பைக்கில் ரசிகர்கள் ஊர்வலமாக வருகின்றனர் மேலும் அவர் விமானம் பிடித்து எங்கு போனாலும் அதை நன்கு தெரிந்துகொண்டு அவரை பின் தொடர்கின்றனர் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் அறிந்து கொண்ட அஜித் அதன் காரணமாகத் தான் சென்னையில் தனது படத்தை எடுக்க விடாமல் வெளி மாநிலங்களில் படத்தின் ஷூட்டிங்கை வைத்து நடித்து வருவதாக கூறினார்.