வெளி வருவதற்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த புஷ்பா 2.! மெய்சிலிர்ந்த சினிமா வாசிகள்…

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு ஐந்து மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வெற்றியை தேடி தந்தது மட்டும் இல்லாமல் வசூலில் 300 கோடிக்கு மேல் லாபம் பார்த்தது. முதல் பாகத்தில் வெற்றியடைந்த புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் குறித்து சில தகவல் வெளியாகியிருக்கிறது அதை பார்த்த ரசிகர்கள் வாய் அடைத்து போய் இருக்கிறார்கள். அதாவது வெளி வருவதற்கு முன்பு பல கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அல்லு அர்ஜுன், ராஸ்மிகா, சாய் பல்லவி, உள்ளிட்ட பலர் நடிக்கும் புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாகத்தில் உ சொல்றியா பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடியிருந்தார்.

ஆனால் இரண்டாவது பாகத்தில் இது போல ஒரு ஐட்டம் பாடல் இடம்பெற்று இருக்கிறது ஆனால் அந்த ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா அவர்கள் நடனமாட மறுத்துவிட்டாராம் அதற்கு பதிலாக பிரபல முன்னணி நடிகையை ஒருவர் நடனம் ஆட இருக்கிறார் அதுவும் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது புஷ்பா படத்தின் பிரீ ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது புஷ்பா படத்தின் OTT உரிமம், சாட்டிலைட் உரிமம் என அனைத்தையும் சேர்த்து 1000 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது இதை பார்த்த ரசிகர்கள் வெளிவருவதற்கு முன்பே ஆயிரம் கோடியா என வாய் பிலந்து பார்க்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக இந்த படத்தின் டிரைலர் அல்லது டீசர் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment