புலியே 2 அடி பின்னாடி போச்சுன்னா புஷ்பா வந்துட்டான்னு அர்த்தம்.! மிரட்டலாக வெளியானது புஷ்பா 2 ட்ரைலர்…

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்திலிருந்து தற்போது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் இவர் கடந்த ஆண்டு புஷ்பா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் சுனில் மற்றும் பகத் பாஸில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிரட்டியது.

இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சமீபத்தில் ஒரு அப்டேட் வெளியானது.

புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து ஒரு அப்டேட் வெளியாகும் என படகுழு சமீபத்தில் அறிவித்திருந்தது அந்த வகையில் படக்குழு அறிவித்தது போலவே தற்போது புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது.

இந்த ட்ரெய்லரில் புஷ்ப அவர்கள் பல மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இருக்கிறது அது மட்டுமல்லாமல் அவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் அவர் என்ன நிலைமையில் இருக்கிறார் என்று மக்களுக்கு தெரியவில்லை ஆகையால் அனைத்து மக்களும் போராட்டத்தில் இறங்குகிறார்கள்.

பல போராட்டத்திற்குப் பிறகு 144 தடை உத்தரவு விதிக்கப்படுகிறது அதன் பிறகு பத்திரிக்கையில் காட்டில் உள்ள ஒரு கேமராவில் ஒரு வீடியோ சிக்கியிருக்கிறது என்று மக்களுக்கு அந்த வீடியோவை போட்டு காட்டுகிறார்கள்.

அந்த வீடியோவில் ஒரு புலி வருகிறது அந்த புலி ஒரு உருவத்தை பார்த்து ஒரு அடி பின் எடுத்து வைக்கிறது. அப்போது அல்லு அர்ஜுன் தன்னுடைய மிரட்டலான முகத்தை காண்பிக்கிறார் அப்போதுதான் மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு வருகிறது அதாவது அப்போதுதான் புஷ்பா உயிருடன் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் புல்லரிக்க வைத்திருக்கிறது அந்த அளவிற்கு இந்த ட்ரெய்லர் மிரட்டலாக உருவாகி இருக்கிறது.

இதோ புஷ்பா படத்தின் மிரட்டல் ட்ரைலர்…

Leave a Comment