புனித் ராஜ்குமார் :1800 மாணவர்களுக்கு செய்து வந்த கல்வி உதவியை.. இனி இந்த நடிகர் கட்ட போகிறாராம் – பேட்டியில் அவரே சொன்னது.

இவ்வுலகில் இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமீப காலமாக கொரோனா மற்றும் மாரடைப்பு காரணமாக இறந்து போனது மக்களையும் பிரபலங்களையும் பெரிதும் வருத்தப்பட வைத்து உள்ளது அதுபோல சமீபத்தில் கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் புனித் ராஜ்குமார்.

ஜிம்மில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை சில பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் ஒரு சிலரோ வர முடியாத காரணத்தினால் தனது இணையதள பக்கத்தில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டனர்.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சினிமாவையும் தாண்டி பல ஏழை எளியவர்களுக்கு உதவி செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் 1,800 மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுத்து உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி அந்த குழந்தைகளுக்கு யார் கல்வி செலவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஷால் எனிமி பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பற்றியும் பேசினார்.

மேலும் அவர் படிக்க வைத்த 1,800 மாணவர்களுக்கும் இலவசக் கல்வி இனி நான் தருவேன் என கூறி உள்ளார். இச்செய்தி தற்போது அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment