திருமணம் முடிந்த கையோடு மறைந்த தனது நண்பனின் புகைப்படத்தை தொட்டு வணங்கிய புகழ்.! உருக்கமான புகைப்படம்..

சின்னத்திரையில் காமெடியில் கலக்கி வந்தவர் வடிவேலு பாலாஜி இவரின் நினைவு தினத்தை முன்னிட்டு புகழ் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடைய பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் விஜய் டிவியில் காமெடி நடிகராக கலக்கியவர் வடிவேலு பாலாஜி. இவர் வடிவேலுவை  பின்பற்றி காமெடி செய்வதால் இவருக்கு வடிவேலு பாலாஜி என பெயர் வடிவேலு பாடி லாங்குவேஜ் அப்படியே பின்பற்றுவார். இந்த நிலையில் வடிவேலு பாலாஜி கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரின் மறைவு சின்னத்திரை பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வடிவேலு பாலாஜியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் என்பதால் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு அவரது நினைவுகளில் மிதந்து வருகிறார்கள்.  அந்த வகையில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து உள்ளார். அதாவது நீ எங்களுடன் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இப்பொழுதும் நீ இல்லை என்பதை எங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை எப்பவுமே எங்களுடன் நீ இருப்பாய்  மாமா.

என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய முக்கிய தருணங்களில் இல்லாமல் போய் விட்டாயே இதை எழுதும் பொழுது என்னுடைய கண் கலங்குகிறது மாமா மிஸ் யூ மாமா என குக் வித் கோமாளி புகழ்  தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்டை பதிவிட்டுள்ளார் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது.

வடிவேல் பாலாஜியும் புகழும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மாமா மச்சான் என்கின்ற அளவுக்கு அவர்களின் நட்பு மிகவும் நெருக்கமானது பாலாஜி உயிரிழந்ததை அறிந்த புகழ் துடிதுடித்து போனார் வடிவேலு பாலாஜி மறைந்தாலும் புகழ் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு வடிவேலு பாலாஜியின் புகைப்படம் முன்பு நின்று ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மனைவி பென்சியாவுக்கு வடிவேலு பாலாஜியே மகனாக பிறக்க வேண்டும் என்று புகழ் சமீபத்தில் பேட்டியில் வருத்தத்துடன் கூறினார் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம் என அவருடன் பணியாற்றிய பல பிரபலங்களும் அவரது நினைவு தினத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

pukazh
pukazh

Leave a Comment