இசை வெளியிட்டு விழாவிற்கு நாள் குறித்த ps-2 படக்குழு.! இந்தமுறையும் அது மிஸ் ஆகாது…

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

மேலும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது இந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகமும் உருவாகிவிட்டது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் இசை வெளியீட்டு விழா குறித்து பட குழு ஒரு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.

அதாவது பொன்னின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசையை வெளியீட்டு விழாவை மார்ச் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது கடந்தாண்டு நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல், சங்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர் இந்த முறை இசை வெளியீட்டு விழாவில் யார் கலந்து கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் மற்றும் ராஜமவுலி கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இவர்கள் இருவரும் போன இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதாக சில தகவல்கள் வெளியானது ஆனால் இவர்கள் கலந்து கொள்ளவில்லை இந்த முறை இவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த முறை ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்த முறை எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். விரைவில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment