ரசிகர்களின் கனவு கன்னி இனி நீதான்.! சினிமா ஆசை காட்டி கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய தயாரிப்பாளர்…

பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பயங்கரம் சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றைக் கொடுத்தார் அந்த புகார் அனைவரையும் பதபதக்க வைத்துள்ளது.

அந்தப் புகாரியில் அவர் கூறியதாவது எனக்கு சிறுவயதில் இருந்து நடிப்பில் அதிக ஆர்வம் இருந்தது அதனால் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தது நான் கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தேன் அப்பொழுது பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன். அந்த அறிவிப்பில் டிஎன் 41 என்ற படத்தில் நடிப்பதற்கு கதாநாயகி தேவை என விளம்பரம் செய்திருந்தார்கள்.

அழகான பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படும் என இருந்தது அப்பொழுது அந்த விளம்பரத்தில் மொபைல் நம்பர் கொடுக்கப்பட்டிருந்தது நான் அந்த மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு பேசினேன் மறுபக்கம் பேசிய அந்த நபர் பொள்ளாச்சியில் மகாலிங்கபுரத்தில் பிரபல விடுதியில் நடிகை தேர்வு நடப்பதாக கூறினார். எப்படியாவது நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் நானும் சென்றேன்.

அங்கு இருந்த கரூர் நல்லியம்பாளத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் 34 வயது தன்னை தயாரிப்பாளர் என அறிமுகம் செய்து கொண்டார் அதுமட்டுமல்லாமல் அவர் பிரபல அரசியல் கட்சியில்  மாநில செயலாளராகவும் இருந்தார். அப்பொழுது ஒவ்வொரு பெண்களை அறைக்கு அழைத்துச் சென்று நடிகை தேர்வு செய்தார். என்னையும் அழைத்தபோது உள்ளே சென்றவுடன் குளிர்பானம் கொடுத்தார் அந்த குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்திருந்தது தெரியாமல் நான் அதை குடித்து விட்டேன் உடனே மயங்கி விழுந்து விட்டேன்.

சுயநினைவு  இல்லாமல் இருந்த என்னை அவர் அவரின் கேவலமான ஆசைக்கு   பயன்படுத்திக் கொண்டார். மயக்கம் தெளிந்தவுடன் இது குறித்து நான் அவரிடம் கேட்ட பொழுது உனக்கு 17 வயது தான் ஆகிறது 18 வயது நிறைவடைந்த உடன் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி கொடுத்தார் அதுமட்டுமில்லாமல் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கும் வாய்ப்பு கொடுக்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.

இப்படி ஆசை வார்த்தை கூறி என்னை பலமுறை அழைத்து அவரின்  ஆசைக்கு பயன்படுத்திக் கொண்டார் இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன் அதன் பிறகு அவர் என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திக் கொண்டார் கதாநாயகியாக நடிக்க வைக்கவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறிய பார்த்திபன் என்னை ஏமாற்றி விட்டார் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரை பார்த்த   பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் சார் விரைந்து ஆக்சன் எடுக்க கிளம்பி விட்டார்கள் மைனர் பெண் என்று தெரிந்தும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவியை  மோசமாக பயன்படுத்திக் கொண்ட பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Leave a Comment