மாநாடு திரைப்படத்தின் வெறித்தனமான அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

சிம்பு தற்போது படுபிஸியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு இந்த திரைப்படத்திற்கு முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வசூல் செய்து சாதனை படைத்தது அந்த திரைப்படத்தில் சிம்பு மிகவும் ஸ்லிம்மாக இருந்ததால் தான் அடுத்தடுத்து திரைப்படங்களை கைப்பற்ற முடிந்தது என்றே கூறலாம்.

மேலும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வரும் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமீப காலமாகவே சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி அதிலும் குறிப்பாக சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் இணைந்ததோடு அடுத்ததாக இன்னும் இரண்டு நட்சத்திரங்கள் இணைந்துள்ளார்கள் அதற்கான அதிகாரபூர்வ புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி  வந்தது.

மேலும் மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றதை அடுத்து படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் புதிதாக ரசிகர்களுக்கு அப்டேட் வெளியிட்டுள்ளார் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆம் மாநாடு திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மாலத்தீவில் இடம் பார்த்து வருவதாக சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment