விஜய்யினால் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டத்தை பிரதீப் ரங்கநாதன் தீர்த்து வைத்தார்.! தயாரிப்பாளர் அதிர்ச்சி தகவல்..

சினிமாவில் டாப் நடிகர்களாக இருந்து வந்தாலும் கூட இவர்களுடைய ஒரு சில திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வியினை அடைந்து வருவதால் அதனை தயாரிக்கும் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் ஒரு சில நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால் கண்டிப்பாக அவர்களுடைய படங்கள் பல கோடி வசூல் செய்து விடும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

இவ்வாறு இது போன்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் எண்ணத்தில் தயாரிப்பாளர்களும் எப்படியும் கண்டிப்பாக ஒரு சில டாப் நடிகர்களின் படங்கள் வெற்றினை பெற்று விடும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இவர்களுடைய படங்கள் தான் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

அப்படி கடைசியாக இவர்களுடைய நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்கள் வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையை படைத்தது. மேலும் இதற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தான் பிகில். இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

எனவே ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் மதுரை அன்புச்செல்வன் ஆகியோர் வீடு மற்றும் தொழில் இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர் இதனால் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பல பிரச்சனைகள் வரத் தொடங்கியது. அந்த நேரத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து வந்த படம் தான் லவ் டுடே இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் சமீப விழா ஒன்றில் பேசிய ஏஜிஎஸ் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி பழைய படத்தின் தோல்வியில் மிகுந்த நஷ்டத்தில் இருந்தோம்.

அதனை மீட்டெடுத்து பழைய நிலைமைக்கு கொண்டு சென்ற படம்தான் லவ் டுடே எனவே தான் லவ் டுடே படம் மிகவும் ஸ்பெஷலானது எனக் கூறியிருக்கும் நிலையில் அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் விஜய்யின் பிகில் படத்தினை தான் கூறுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment