புதிய புகைப்படத்தை வெளியிட்டு சூர்யாவுக்கு நன்றி தெரிவித்த “எதற்கும் துணிந்தவன் பட நடிகை”.! போட்டோ வேற லெவல்..

நடிகர் சூர்யா சமீபகாலமாக சமூக அக்கரை உள்ள படங்களை கொடுத்து ரசிகர்கள் மற்றும் மக்களையும் சந்தோஷப் படுத்தி வருகிறார் நல்ல படங்களை கொடுத்து வந்தாலும் சூர்யாவின் திரைப்படங்கள் கடந்த இரண்டு வருடங்களாக திரையரங்கில் வெளியாகி இருந்தன அந்த குறையைப் போக்கும் வகையில் பாண்டிராஜ் உடன் கைகோர்க்கும் சூர்யா நடித்த திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன்.

இந்த படம் பல்வேறு தடைகளைத் தாண்டி ஒருவழியாக திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படமும் சமூக கருத்துக்களை எடுத்துரைக்கும் திரைப்படமாக அதேசமயம் ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி என அனைத்தும் இருந்ததால் தற்போது ரசிகர்களும் பொது மக்களும் இந்த படத்தை பார்த்து கண்டுகளித்து வருகின்றனர். இதுவரையிலும்

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல விமர்சனத்தையே பெற்றுவருகிறது அதேசமயம்  நல்ல வசூலை இந்த திரைப்படம் கண்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் சூர்யா உடன் இணைந்து பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், சூரி, புகழ் மற்றும் திவ்யா துரைசாமி போன்ற பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி உள்ளனர்.

படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக இவர்கள் உள்ளதால் அனைவருக்கும் சினிமாவில் நல்லதொரு எதிர்காலம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார் நடிகை பிரியங்கா அருள்மோகன் சூர்யாவுடன் நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது அவருடன் முதல் முறையாக நடித்துள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பிரியங்கா அருள் மோகன் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து அசத்தியுள்ளார் அதன் புகைப்படம் தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

surya
surya

Leave a Comment