வெறும் 35 நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் திரைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையின் மூலம் அறிமுகமான சில நடிகைகள் தற்போது வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தொடர்ந்து வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தொகுப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் பிரபலமான நிலையில் பிறகு மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு அடுத்தடுத்து கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமான நிலையில் தற்பொழுது தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு தனுஷ்வுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார் பிறகு இந்த வருடத்தின் துவக்கத்தில் ஜனவரி மாதம் தெலுங்கில் வெளிவந்த கல்யாணமாம் கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படங்கள் 35 நாட்களில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றது.

அந்த வகையில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ஜெயம் ரவி நடிப்பில் மார்ச் 10ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் அகிலன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மார்ச் 30ஆம் தேதி சிம்பு, கௌதம் கார்த்திக் உடன் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள பத்து தல படம் வெளியாக இருக்கிறது.

மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து இந்தியன் 2, பொம்மை, டிமாண்டி காலனி 2 மற்றும் தெலுங்கில் உருவாகி இருக்கும் ஜீப்ரா என நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர். இவ்வாறு தற்பொழுதே நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளை விட ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரியா பவானிசாகர் தான்.

Leave a Comment