நான் மொட்டை பயலாக இருக்க காரணம் இதுதான்.! உண்மையை உடைத்த பிரேம்ஜி

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரேம்ஜி இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் அவரது சகோதரரான வெங்கட்பிரபு இயக்கத்தில் 600028 என்ற திரைப்படத்தில் பிரேம்ஜி நடித்தார்.

இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தார் அந்த வகையில் இவர் சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்பிரமணியம், மங்காத்தா, சத்தியம் ,ஒன்பதுல குரு ,சேட்டை ,நாரதன் ,சிம்பா போன்ற திரைப்படங்களில் காமெடியானாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

பிரேம்ஜி தமிழ் சினிமாவில் காமெடியனா மட்டும் தனது பயணத்தைத் தொடராமல் ஹீரோவாக 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மாங்கா என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். தற்பொழுது தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகிறார் பிரேம்ஜியை இவர் தற்போது இசை அமைப்பாளராக மாறி பல படங்களில் இசையமைத்து வருகிறார்.

அந்த வகையில் இவர் துணிச்சல், நெஞ்சை கில்லாதே, தோழா ,அதே நேரம் அதே இடம், எண்ணமோ நடக்குது ,அச்சமின்றி ,ஜாம்பி போன்ற பல படங்களில் இசையமைத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டு வருகிறார்.இந்த நிலையில்  அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பிரேம்ஜியை சமீபகாலமாக திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறி வந்த நிலையில் அதற்கு பதிலளித்த முரட்டு சிங்கிள் பிரேம்ஜி

வீட்டில் பலரும் திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார் ஆனால் எனக்கு திருமணம் வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டேன் என்னுடைய வாழ்க்கையில் நான் நிம்மதியாக ஜாலியாக இருக்க விரும்புகிறேன் அதுமட்டுமில்லாமல் மத்தவங்களுக்காக நான் வாழவும் விருப்பமில்லை எதுக்கு கல்யாணம் ,குழந்தை குட்டி எல்லாம் வேணாம் தனியாக வாழ்ரது தான் மகிழ்ச்சி எனக்காக நான் வாழ ஆசைப்படுகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

Leave a Comment