தமிழ் சினிமாவில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தும் பிரபலங்களில் சினிமாவில் நீண்ட வருடங்கள் பயணிக்க முடியும் அந்த வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் பின்னி பெடலெடுத்து தற்போது இவருக்கு தென்னிந்திய திரை உலகில் இரண்டாவது ரவுன்ட் அடித்து வருகிறார்.
பல நடிகர்களுக்கு அப்பாவாகவும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் ஒரு முன்னணி நடிகைக்கு மட்டும் அப்பாவாகவும், காதலனாகவும் நடித்து அசத்தியுள்ளார் பிரகாஷ்ராஜ் அந்த நடிகையை வேறு யாருமல்ல பிரபல நடிகைகள் திரிஷா தான்.
கில்லி படத்தில் அவரை காதலிப்பார் அதைத் தொடர்ந்து அபியும் நானும் என்ற திரைப்படத்தில் த்ரிஷாவுக்கு அப்பாவாக நடித்து இருப்பார்.
இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது அந்த அளவிற்கு கதா பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு இவரால் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடிகிறது பல வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் இருவரும் ஒரு முக்கிய படத்தில் இணைந்துள்ளனர் அந்த படம் வேறு எதுவும் இல்லை மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கின்றனர் இந்தப் படத்தில் சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜும், குந்தவியாக திரிஷாவும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் இருவரும் இணைந்து உள்ளது இந்த படத்திற்கு ப்ளஸ் ஆக பார்க்கப்படுகிறது இவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.