கோமாளி கதையில் பஞ்சாயத்து பண்ணிய பார்த்திபனை லவ் டுடேவில் வச்சி செய்த பிரதீப் ரங்கநாதன்.! அதிர்ச்சி தகவல் இதோ

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைக் கொண்டு இயக்குவதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன் இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் இயக்கி நடித்த படமான இரவின் நிழல் திரைப்படத்தை ஒரே ஷாட்டில் படமாக்கி சினிமாத்துறையினரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய பார்த்திபன் கோமாளி படத்தின் போது நான் பஞ்சாயத்து பண்ணியதாகவும் அதனை மனதில் வைத்துக் கொண்டு பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே திரைப்படத்தில் என்னை பழி வாங்கியதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது கோமாளி படம் வெளியாவதற்கு முன்பு பார்த்திபனின் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு கதையை பார்த்திபனிடம் கூறியிருக்கிறார் அந்த கதையும் கோமாளி படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாக பிரச்சனை செய்துள்ளார் பார்த்திபன் அது மட்டுமல்லாமல் இந்த பஞ்சாயத்து பாக்யராஜ் முன்னிலையில் பேசிய நிலையில் உதவி இயக்குனருக்கு 10 லட்சம் வாங்கிக் கொடுத்திருக்கிறார் பார்த்திபன்.

இதெல்லாம் கோமாளி படத்தில் ரிலீஸ் சமயத்தில் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பிரதிப் ரங்கநாதன் லவ் டுடே திரைப்படத்தில் பக்காவா பேசிக்கிட்டு இருந்த நீ… பார்த்திபன் மாதிரியே பேச ஆரம்பிச்சிட்டியே என லவ் டுடே திரைப்படத்திள் டயலாக்கை வைத்து பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.

லவ் டுடே வெளியான போது தியேட்டரில் போய் பார்த்த பார்த்திபனுக்கு இந்த காட்சியை பார்த்ததும் சிரிப்புதான் வந்திருக்கிறது அதன் பிறகு யோசித்துப் பார்க்கும்போது தான் இந்த டயலாக்கின் முழு அர்த்தமே எனக்கு தெரிந்தது என்று கூறியிருக்கிறார் அதாவது இந்த டயலாக் இத்தனை நாளா நல்லாதானே இருந்த நீ திடீர்னு பைத்தியம் ஆயிட்டியே என்ற டயலாக் தான் இது ஆனால் லவ் டுடே திரைப்படத்தில் இதை அப்படியே மாற்றி உல்ட்டாவாக போட்டு இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன் என்று கூறி இருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version