“லவ் டுடே” படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதனுக்கு அடித்த 3 ஜாக்பாட்..! கிடுகிடுவென உயரும் சினிமா மார்க்கெட்.

சினிமா உலகில் பல உண்மை சம்பவங்கள் நாவல்கள் போன்றவற்றை படமாக எடுத்து வெற்றி கண்டு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றனர் இதற்கு மாறாக அண்மைக்காலமாக இளம் இயக்குனர்கள் பலரும் எடுத்த உடனேயே டாப் நடிகர்களுக்கு கதை கூறி கமிட் ஆகி ரசிகர்களை கவறும்படியான படங்களை கொடுத்து ஓவர் நைட்டில் இடம் பிடிக்கின்றனர்.

அந்த இயக்குனர்களின் வரிசையில் ஒருவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் ஆரம்பத்தில் குறும்படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது அப்படி முதல் படமாக ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்னும் படத்தை இயக்கினார். இந்த படம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாவதாக அவர் இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த படம் இந்த காலகட்டத்தில் உள்ள இளைஞர்களை கவரும்படியான காதல் கதையாக அமைந்திருந்ததால் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதின.. மேலும் இந்த வருடத்தின் டாப் 10 மூவிகளில் ஒன்றாக லவ் டுடே படம் இடம் பிடித்திருந்தது.

இது மட்டுமல்லாமல் இந்த படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பிரபலமடைந்தார் மேலும் அவருக்கு அதிக ரசிகர்கள் பட்டாளமும் உருவாகின.. இதனால் பிரதீப் ரங்க நாதனின் அடுத்த படம் என்ன அதை யார் தயாரிக்கப் போகிறார் என்ற கேள்வி தான் பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதனிடம் லவ் டுடே படத்தை இயக்கும் போதே..

ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்தடுத்து இரண்டு படங்களை பண்ண கையெழுத்து போட்டு இருக்கிறாராம். அதனைத் தொடர்ந்து ராக்ஃபோர்ட் முருகானந்தத்துடன்  அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு இருக்கிறார். இந்த இரண்டு நிறுவனங்களுடன் இணைவதற்கு முன்பாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இவர் ஒரு அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இதனை சமீபத்தில் வலைப்பேச்சு நண்பர்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment