கதை சொல்ல லண்டனுக்கு பறந்த பிரதீப் ரங்கநாதன்.. இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

இளம் இயக்குனர்கள் காலத்திற்கு ஏற்றவாறு சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ், வினோத், நெல்சன் போன்றவர்கள் லிஸ்டில் பிரதிப் ரங்கநாதனும் இணைந்துள்ளார் இவர் முதலில் கோமாளி படத்தை இயக்கி வெற்றி கண்டார் அதனை தொடர்ந்து இவரே இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே.

அந்த படம் அண்மையில் திரையரங்குகளில் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடி வசூலில் புதிய சாதனை படைத்தது. படம் முழுக்க முழுக்க லவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இருந்தாலும் இந்த காலகட்டத்திற்கு தேவையான நிறைய முக்கியத்துவம் உள்ள விஷயங்கள் இருந்ததால் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உயர்ந்து உள்ளது மேலும் டாப் நடிகர்கள் கூட இவரிடம் கதை கேட்க ரெடியாக இருக்கின்றனர் அந்த வகையில் ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் விஜய்க்கு ஒரு வித்தியாசமான கதை ஒன்றை சொல்லி உள்ளார் என தகவல்கள் வெளிவந்தன.

இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இவர் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன. அது தற்பொழுது உறுதிப்படுத்தும் வகையில் சில தகவல்கள் வெளிவந்துள்ளன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் தற்போது லண்டன் சென்று இருக்கிறார்

அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இதை வைத்து பார்க்கும் போது பிரபல  தயாரிப்பாளர் சுபாஷ்கரனை சந்தித்து கதை சொல்லப் போகிறார் என பலரும் கூறி வருகின்றனர். அப்படி என்றால் ரஜினி, லைக்கா நிறுவனம் இணையும் அந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..

Leave a Comment