இரண்டாவது திருமணத்திற்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பிரபுதேவா.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிகராகவும்,நடன புயலாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரபுதேவா. இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் இவரை அனைவரும் மைக்கேல் ஜாக்சன் என்று அழைப்பார்கள்.

இவரின் நடன திறமையை பார்த்து பலர் இவரின் ரசிகர்களாக மாறினார்கள். அந்தவகையில் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடன இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிரபுதேவா நடிகர், இயக்குனர் நடன,திரைப்பட இயக்குனர்,தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கைவசம் வைத்துள்ளார். பொதுவாக சினிமா என்றாலே ஒருவரை திருமணம் செய்து கொண்டால் கடைசி வரை அவருடன் மட்டும் தான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

அவர்களை பிடிக்க வில்லை என்றால் உடனே விவாகரத்து வாங்கிக் கொள்ளலாம். அந்த வகையில் தற்போது பலர் 2,3 திருமணங்கள் கூட செய்தவர்கள் சினிமாவில் உள்ளார்கள். அந்தவகையில் பிரபுதேவா ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.

அதன் பிறகு பிரபுதேவா மீது பல காதல் சர்ச்சைகள் எழுந்தது. அந்தவகையில் பிரபுதேவா நடிகை நயன்தாராவுடன் லிவிங்டுகெதர் வாழ்ந்து வருகிறார் என்று அவருடைய மனைவி போலீசாரிடம் கம்ப்ளைன்ட் பண்ணி இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபுதேவா இரண்டாவுது திருமணம் செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது யாராக இருக்கும் என்று பல கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இதனை ராஜ் சுந்தரம் அவர்கள் உண்மையில் பிரபுதேவா தனது தோழியான ஷிமானி என்பவரை சிம்பிளாக கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு தற்போது பிரபுதேவா மொட்டையடித்து தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்குப் பிறகு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி விட்டீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

prabu theva
prabu theva

Leave a Comment