ரசிகர்கள் எதிர்பார்த்தது போல வெளியானது பொன்னியின் செல்வன் அகநக பாடல்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

பிரபல நாவலான கல்கியின் நாவலை தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

500 கோடியை தாண்டி வசூலித்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகலான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் அல்லது டீசர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் விரைவில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனை தொடர்ந்து பொன்னின் செல்வன் 2 பட குழு சமீபத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தது அதாவது நடிகை திரிஷா அவர்கள் கையில் வாளை ஏந்தி கொண்டு நடிகர் கார்த்தி அவர்கள் மண்டியிட்டு கண்களை மூடிக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதுமட்டுமல்லாமல் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் அகநக பாடல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அகநக பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடல் ரசிகர்களின் மனதை உருக்கும் அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். மேலும் முதல் பாகத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதோ அகநக பாடல்.

Leave a Comment