சொன்ன தேதியில் வெளியாகும் பொன்னியின் செல்வன் 2.! வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ps2 படகுழு…

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஒரு வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கி உள்ளது. இந்த திரைப்படத்தை கல்கியின் நாவலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விக்ரம், விக்ரம் பிரபு, கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் இன்னும் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடையாமல் இருப்பதாகவும் அதனால் ரிலீஸ் தேதி தள்ளி போக இருப்பதாகவும் சில வதந்திகள் ஊடகங்களில் பரவியது. இந்த நிலையில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் பொன்னியின் செல்வன் படகுழு ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தது.

அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கிளிப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு மறுபடியும் ஏப்ரல் 28ஆம் தேதி படம் ரிலீஸ் என்பதை உறுதி செய்து இருக்கிறது பொன்னியின் செல்வன் 2 பட குழு. இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்கும் நடிகர் விக்ரமின் கதாபாத்திரம் எப்படி சாகும் என்பதை மிகப் பிரமாண்டமாக காட்டியிருக்கிறாராம் இயக்குனர் மணிரத்தினம்.

அதுமட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிக விறு விறுப்பாக இருக்கும் என கூறப்படுகிறது மேலும் இரண்டாவது பாகத்தில் ஐஸ்வர்யாவின் கதாபாத்திரத்தின் சஷ்பென்ஷை கூறும் வகையில் இருப்பதாக கூறபடுகிறது. மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தின் இசை வெளியீட் விழாவை வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறபடுகிறது.

Leave a Comment