கரிகாலனாக ஒத்த மனுஷன் மொத்த படத்திலேயும் புகுந்து விளையாடுறாரு .! பொன்னியின் செல்வன் 2 ட்விட்டர் விமர்சனம்.!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வெளியாகிவிட்டது. முதல் பாகத்தில் இருந்த புரியாத புதிருக்கு இரண்டாவது பாகத்தில் விடை கிடைத்து விட்டது. உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த இரண்டாவது பாகம் முதல் பாகத்தை போல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் வெளியாகி பல இடங்களில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ட்விட்டர் விமர்சனத்தை இங்கே காணலாம். மேலும் மணிரத்தினத்தின் இந்த திரைப்படத்தை இந்திய சினிமாவின் முழுமையான பெருமை என பலரும் அழைக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் இந்த திரைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என கூறியுள்ளார்கள். மேலும் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு இரண்டாவது பாகம் இருப்பதாக கூறியுள்ளார்கள்.

ஆதித்ய கரிகாலனாக விக்ரமும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் படத்தில் மிரட்டி உள்ளார்கள். விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் முகத்தை பார்க்கும் பொழுது மிரட்டலாக இருப்பதாக கூறியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் மூஞ்சில் 300 நம்பியாரை காட்டுவது போல் முகபாவனையில் மிரட்டுகிறார்கள்.

விக்ரம் மொத்த படமும் இந்த ஒத்த மனுஷன் புகுந்து விளையாடீடாரு ஒரு ரியல் கரிகாலன்ன கண்ணு முன்னாடி அப்டியே நிறுத்திரிக்காரு மனுஷன்.

மணிரத்தினம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கி செதுக்கி வைத்துள்ளார் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா என அனைவரும் தங்களுடைய கதாபாத்திரத்தை மிகவும் அழகாக நடித்துள்ளார்கள். நேர்த்தியாக நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களும் இந்த திரைப்படத்திற்கு பிளஸ் தான் வழக்கம்போல ஏ ஆர் ரகுமான் பின்னணி இசை மற்றும் பாடல் காட்சியில் பின்னி பெடல் எடுத்து விட்டார்.

பொன்னியின் செல்வன் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலால் ஈர்க்கப்பட்டு வரலாறு நாடகம் சோழர்களின் நிஜ வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சி 3200 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.  பாக்ஸ் ஆபீஸ் வல்லுனர்கள் கணித்தது போல் இந்த திரைப்படத்தின் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment