பொன்னியன் செல்வன் 2 படத்தின் முதல் விமர்சனம்.! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி  திரையில் வெளியாக காத்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தின் முதல் விமர்சனத்தை ட்விட்டர் பிரபலம் ஒருவர் வெளியிட்டது வைரல் ஆகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது இதனிடையே பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் முதல் விமர்சனம் குறித்து உமைர் சந்து  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பொதுவாக ட்விட்டர் பிரபலம் உமைர் சந்து தவறான அப்டேட்களை வெளியிட்டு நெட்டிசன்களுக்கு இடையே  திட்டுவாங்கி வருகிறார் அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தின் முதல் விமர்சனம் என ஒரு ட்விட் போட்டு இருக்கிறார்.

அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் பெரிய தோல்விதான் என்று சில தகவல் கிடைத்திருக்கிறது என்று ட்விட் செய்துள்ளார். சென்சார் காப்பியில் பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம் வந்துவிட்டதாகவும் அதன் அடிப்படையில் தான் இந்த ட்விட் எனவும் அவர் மறைமுகமாக கூறியிருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பொன்னியின் செல்வன் 2 இன்னும் சென்சார்கே செல்லவில்லை எனவும் இப்படி உருட்ட வேண்டாம் எனவும் நெட்டிசன்கள் அவரை திட்டி வருகிறார்கள். அது பட்டும் இல்லாமல் முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகம் வெற்றி பெரும் என்றும் கூறிவருகிறார்கள்.

Leave a Comment