புதிய திரைப்படத்தால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூலுக்கு வந்த பெரும் ஆப்பு.! அட இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே என உச்சி கொட்டும் தயாரிப்பு நிறுவனம்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வரையிலும் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின்  செல்வம் திரைப்படத்தை தீபாவளி முன்னிட்டு  பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நிறுத்த சிலர் வற்புறுத்தியதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

தீபாவளி அன்று வெளியாக உள்ள சர்தார் மற்றும் பிரின்ஸ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இதனால் தீபாவளி அன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்றும் சர்தார் மற்றும் பிரின்ஸ் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம்  drstribution அடிப்படையில் வெளியிடப்பட்டது அதற்காக வசூல் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியன அதன் அடிப்படையில் முதல் வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 25% விநியோகஸ்தர்களுக்கு 75%. இரண்டாவது வாரம் உரிமையாளர்களுக்கு 30 சதவீதம் விநியோகஸ்தர்களுக்கு 70 சதவீதம். மூன்றாவது வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் விநாயகஸ்தர்களுக்கு 65 சதவீதம். நான்காவது வாரத்தில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு நாப்பது சதவீதம் விநியோகஸ்தர்களுக்கு 60% எனது அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் அடிப்படையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட்டு தீபாவளி சமயத்தில்தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் நான்காவது வாரம் எனவே தமிழகத்தில் உள்ள சுமார் 100 திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் அந்த சமயத்தில்தான் திரையரங்கு உரிமையாளர்கள் அதிகம் லாபம் பார்ப்பார்கள்  என்று கூறுகின்றனர்.

ஆனால் தீபாவளியில் வெளியாகும் சர்தார் மற்றும் பிரண்ட்ஸ் திரைப்படத்தை தான் திரையிட வேண்டும் என்று சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சில திரையரங்குகளில் தீபாவளி படங்களை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

Leave a Comment