பாகுபலி படத்தினால் தான் பொன்னியின் செல்வன் படம் உருவானது.! மணிரத்தினம் விளக்கம்

தற்பொழுது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில் இந்த படம் உருவாவதற்கு முக்கிய காரணம் பாகுபலி திரைப்பட இயக்குனர் மணிரத்தினம் என்று சமீப பேட்டி ஒன்றில் மணிரத்தினம் கூறியுள்ளார்.தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் மணிரத்தினம் தொடர்ந்து வித்தியாசமான கதை உள்ள திரைப்படங்களை உலகிற்கு தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் மேலும் இவர் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றினை பெற்று வருகிறது.

மேலும் இப்படி எல்லாம் யோசிக்கலாமா என ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு மணிரத்தினம் தன்னுடைய சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்.மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த படங்களை எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வரும் நிலையில் அனைவரின் கனவனான பொன்னியின் செல்வன் என்ற பல்லாண்டு வரலாற்று சிறப்புமிக்க காவிய கதைகளில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையினை தற்பொழுது திரைப்படமாக  உருவாகி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது மேலும் முதல் பாகம் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.இத்திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார் மேலும் இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ்,கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு ,ஜெயராம், ஐஸ்வர்யாராய், த்ரிஷா என பல சினிமா முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் பாடல்களும் வெளியாகி வருகிறது இந்நிலையில் இரண்டாவது பாடலான சோழா சோழா வெளியிடப்பட்ட நிலையில் ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது அதில் இயக்குனர் மணிரத்தினம் நடிகர் பலரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் அந்த விழாவில் பேசிய மணிரத்தினம் அர்கள் வரலாற்று படங்களை மிகச் சிறப்பாக இருக்க முடியும் என்பதை பாகுபலி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ராஜாமௌலி நிரூபித்து காட்டினார் அந்த வகையில் பாகுபலி படமும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது இது எங்களுக்கு வரலாற்று படத்தை சிறப்பாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஒரு ஐடியாவையும் கொடுத்தது இதற்காக ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அதேபோல் இந்த படத்தை தெலுங்கில் வெளியிட முடிவு செய்த தில்ராஜ் அவர்களுக்கு நன்றி என கூறி இருக்கிறார்.

Leave a Comment