பெருசா ஆசைப்பட்டு ஏமாந்து போன பொன்னியின் செல்வன் படக்குழு.! ஆறுதல் சொல்லி தேத்தும் ரசிகர்கள்..

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்தார் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இதுவரை கதையாக படித்த மக்கள் முதல் முறையாக படமாக பார்த்தனர்.

எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் நல்ல விமர்சனத்தை கொடுத்தனர் அதன் காரணமாக அணைத்து இடங்களிலும் வசூல்  வேட்டை நடத்தியது. ஒட்டு மொத்தமாக சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் உடனே ரிலீஸ் ஆகும் என படக்குழு சொன்னது அதன்படி படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டது.

வரும் ஏப்ரல் 28ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. அதற்கு முன்பாக பொன்னியின் செல்வன் படகுழு  தொடர்ந்து வீடியோ மற்றும் போஸ்டர்களை வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது இதனால் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் 1000 கோடி வசூல் செய்யும் என பலரும் கூறி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படம் பல்வேறு விருதுகளை வாரிகுவித்து வருகிறது.

சமீபத்தில் கூட கன்னட திரைப்பட விழாவில் பல விருதுகளை அள்ளிய நிலையில் நேற்று ஹாங்காங்கில் நடைபெற்ற 16 வது ஆசிய திரைப்பட விழா போட்டி நடந்தது. இதில் சிறந்த படம், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த எடிட்டிங், சிறந்த கலை வடிவமைப்பு, சிறந்த ஆடை வடிவமைப்பு என மொத்தமாக ஆறு பிரிவுகளில் பொன்னியின் செல்வன் நாமினேஷன் ஆனது இதில் இரண்டாவது நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஒரு பிரிவில் கூட பொன்னியின் செல்வன் திரைப்படம் விருது பெறவில்லை இது படக்குழுவுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறதாம்.  விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த அனைத்து விருதுகளையும் தட்டி தூக்கும் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

Leave a Comment