அடுத்த வசூல் வேட்டைக்கு தயாரான பொன்னியின் செல்வன் 2..! ரிலீஸ் தேதி இதுதான்..

இயக்குனர் மணிரத்தினம் உண்மை மற்றும் நாவல் கதைகளை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் அந்த வகையில் அண்மையில் தனது கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஒரு வழியாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்தார். படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார்.

அதன்படி முதல் பாகம்  கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கோலாக்காலமாக திரையரங்குகளில் வெளியானது. மக்கள் மற்றும் ரசிகர்கள் இதுவரை பொன்னியின் செல்வன் கதையைப் படித்து தான் இருந்தார்கள் முதல்முறையாக படமாக பார்க்க ஆர்வம் காட்டினார். அவர்கள் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் நல்ல விமர்சனத்தை கொடுத்தனர்.

அதன் காரணமாக இந்த படம் தொடர்ந்து ஹவுஸ் புல்லாகி ஓடியது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா,  ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம்,  கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், பிரபு, கிஷோர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

படம் தொடர்ந்து சூப்பராக ஓடியதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது அதன்படி பார்க்கையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை மட்டுமே சுமார் 450 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இன்னமும் சில திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் படம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

இது இப்படி இருக்க.. இந்தப் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் அதிரடியாக உருவாக்கி வருகிறது அந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் 28ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறதாம்.. இன்று சென்னையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழா நடந்தது அப்பொழுது இந்த தகவல் கூறப்பட்டது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment