பொங்கலுக்கு அண்ணாத்த கூட போட்டிபோடாமல் ஒதுங்கும் வலிமை.! காரணம் இதுதான்

தல அஜித் அவர்கள் தற்பொழுது வினோத் உடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படக்குழுவினர் இதற்கு முன்பு நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.வலிமை படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து படத்தின் ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு வரவேண்டிய படம் வராது என்பதை ரசிகர்கள் உணர்ந்திருந்தனர் இதனை தொடர்ந்து பொங்கலுக்கு இப்படம் வெளிவரும் என எதிர்பார்த்து வந்தனர் அதே சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படமும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

இதனால் மீண்டும் இருவரும் பொங்கலுக்கு களம் காணுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்து அதிர்ச்சிக்குயுள்ளனர் வலிமை படக்குழுவினர்.இப்படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன அஜித் அவர்களும் இதற்கு தற்பொழுது ஓகே சொல்லி உள்ளார் என்பது செய்திகள் தற்போது கசிந்துள்ளன.

எனவே இப்படம் பொங்கலுக்கு வராமல் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என கணிக்கப்படுகிறது இதனால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது தல அஜித் அவர்களின் விசுவாசம் நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து தற்போது இப்படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment