சென்னையில் உள்ள நடிகை நிக்கி கல்ராணி வீட்டுக்கு வந்த போலீஸ் – நடந்த திருட்டு சம்பவம்.! யார் தெரியுமா.?

நடிகை நிக்கி கல்ராணி மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும்  ஒரு கட்டத்தில் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும்  பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தமிழில் கூட இவருக்கு நல்ல வரவேற்பு இருந்துள்ளது.

இவர் தமிழில் எடுத்தவுடனேயே டார்லிங் என்ற திரைப்படத்தில் சற்று கிளாமர் காட்டி நடித்து இருந்தாலும் இந்த திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றினார்.அந்த வகையில் யாகாவராயினும் நாகாக்க,கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா,கடவுள் இருக்கான் குமாரு, கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

2022 – ல் இவரது கையில் இடியட் என்ற திரைப்படம் மட்டுமே இருக்கிறது. சினிமாவில் சிறப்பாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் தற்பொழுது ஒரு திருட்டு நடந்து உள்ளது. கொரோனாவால் உண்மையில் பாதிக்கப்பட்ட நிக்கி கல்ராணி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு இப்போது தான் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் இந்த திருட்டு அரங்கேறி சென்னையில் உள்ள நிக்கி கல்ராணி வீட்டில் தனுஷ் என்பவர் வேலை செய்து வந்துள்ளார் அவர் சில தினங்களுக்கு முன்பு நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

அந்த பதிவு  சிசிடிவி மூலமாக கண்காணிக்கப்பட்ட போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு ஒருவழியாக தனுஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பிரபல நடிகையின் வீட்டிலேயே இவ்வாறு உன் செயல் நடந்துள்ளது அங்குள்ளமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Leave a Comment