இயக்குனர் தயாரிப்பாளர் என 5 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போலீஸ்.! அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

police enquiry regarding vj chitra suicide case;நடிகை சித்ரா தற்கொலை தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது சமூக வலைத்தளத்தில் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்,  இதன் பின்னணியில் யார் இருக்கிறார்.  தற்கொலை தூண்டுதலுக்கு யார் காரணம் என போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்ற விசாரணையில் முதல் கட்டமாக அவர் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூட்டிங் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள் போலீசார்.

அப்பொழுது டிசம்பர் 9ஆம் தேதி சூட்டிங் முடிந்து பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வருங்கால கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ரா தங்கியுள்ளார். அப்பொழுது குளிக்க போவதாக கூறிவிட்டு சித்ரா வருங்கால கணவரை வெளியே அனுப்பிவிட்டார்.

பிறகு பட்டுப்புடவையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.  அதிலும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் பொழுது அவள் கன்னத்தில் நகக்கீறல்கள் மற்றும் தாவங்கட்டையில் ரத்த காயம் இருந்ததால் உண்மையிலேயே இது தற்கொலை தானா என சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சித்ராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ரிசல்ட் வெளியானது அதில் சித்ரா உண்மையில் தற்கொலைதான் செய்து கொண்டார் எனவும் அவர் கன்னத்தில் இருந்தது அவரின் நாகக் கீரல் தான் என போலீசார் தெரிவித்தார்.

chitra

இருந்தாலும் சித்ரா தற்கொலை செய்து கொண்டபோது அவர் கணவர் மட்டுமே உடன் இருந்ததால் போலீசார் 3 நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், ஊழியர்கள் என ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள.

அந்த விசாரணை முடிவில் அவர்கள் கூறியதாவது படப்பிடிப்பில் சாதாரணமாகத்தான் சித்ரா இருந்ததாகவும் அவரிடம் எதற்காகவும் எந்த பிரச்சினையும் நடை பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  இதுவரை சித்ராவின் தற்கொலைக்கான காரணங்கள் தெரியாததால் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி காரணத்தை கண்டு பிடிக்க போராடி வருகிறார்கள்.

chitra

Leave a Comment

Exit mobile version