பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை இயக்க போவது ஒரு நடிகரா.! கடைசியில இவரையும் இயக்குனரா.. மாத்திட்டாங்களே. ஆச்சரியப்படும் ரசிகர்கள்.

சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின் நாயகனாக மாறி வெற்றிகளை குவித்து கொண்டு வருபவர் விஜய் ஆண்டனி இவர் நடிப்பில் ஆரம்பத்தில் நான், சலீம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து வெளியான திரைப்படம் தான் பிச்சைக்காரன்.

இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மேலும் விஜய் ஆண்டனி கேரியரில் மறக்க முடியாத ஒரு படமாக பிச்சைக்காரன் படம் அமைந்தது.

ஏனென்றால் படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையிலும் விருவிறுபாக்க அமைந்து இருக்கும் மேலும் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் பல இந்த படத்தில் இருந்தது. இந்த படத்திற்கு கூடுதல் அம்சமாக அமைந்தது.

பிச்சைக்காரன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்குனர் சசி தான் இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தை இயக்கவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்பிறகு இந்த படத்தை யார் இயக்குவார் என எதிர்பார்ப்பு எகிறி நிலையில் இன்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் யார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது அதாவது பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியை இந்த திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தற்பொழுது அவர் பெற்றுள்ளார்.

வேறு யாரும் அல்ல எல்லாவற்றிலும் வெற்றியைக் குவித்து வரும் “விஜய் ஆண்டனி” இந்த படத்தை இயக்க உள்ளார். இதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் கூறி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Comment