டெல்லியில் இன்று திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தது அந்த வகையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் அதில் கலந்துகொண்டனர் அந்த வகையில் ரஜினி, தனுஷ், விஜய் சேதுபதி, டி. இமான், எஸ் கலைப்புலி தாணு, வெற்றிமாறன் போன்ற பலர் கலந்து கொண்டு அசத்தினர்.
இவர்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் ஒரு சாதனையை படைத்துள்ள காரணத்தினால் தான் அவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே உயரிய இது கொடுத்து அவரைப் பெருமைப் படுத்தியது.
அவரைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து இழுத்த நடிகர் தனுஷுக்கு விருதுகள் வழங்கப்பட்டது அதிலும் குறிப்பாக அசுரன் படத்திற்காக மிக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.
இந்த விருது விழாவின் பொழுது ரஜினியின் மனைவி லதா ரஜினி கலந்து கொண்டார் அதுபோல தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டனர் அவர்கள் அமர்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாகிய நிலையில் தற்போது விருதுகளைப் பெற்ற பின் ரஜினி மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.
இணையதளப் பக்கத்தில் தற்போது ஷேர் செய்யப்பட்டு தீயாய் பரவிவருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளீர்கள் என கூறி ரசிகர்களும், மக்களும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இருவரும் இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
A nice heartwarming pic @rajinikanth & @dhanushkraja with their awards. pic.twitter.com/IVAo0pjsS7
— Sreedhar Pillai (@sri50) October 25, 2021